இந்த மாதம் அழிய போகிறதா இந்த உலகம் ?
நான் ஒன்றை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். உலக அழிவு என்பது இந்த உலகில் வாழும் ஜீவராசிகளின் அழிவு மட்டுமே.
உலக அழிவுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அது இயற்கை பேரிடர்கள் (நிலநடுக்கம், சுனாமி, எரிமலை, புயல் போன்றவை). நிபிரு-Planet X என்னும் சொல்லப்படும் பத்தாவது ஒரு கிரகம் நம்மை தாக்கும் என்றும், Polar shift என்று சொல்லப்படும் துருவ மாற்றம் நிகழும் என்றும், Black hole என்று சொல்லப்படும் கருங்குழியின் ஈர்ப்பு விசையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதில் சொன்ன பல விஷயங்கள் அறிவியல் ஆதாரம் இல்லாத காரணத்தினால் ஏற்கபடவில்லை.
ஆனால் அறிவியல் மறுக்காத ஒன்று உள்ளது. அது தான் Coronory Mass Ejection என்று சொல்லப்படும் சூரிய வெப்பக்கதிர்வீச்சு. இந்த ஒரு விஷயத்தை அறிவியல் மறுப்பதில்லை.
இந்த சூரிய வெப்பக்கதிர்வீச்சு என்ன என்பதை பார்ப்பதற்கு முன், இந்த டிசம்பர் 21, 2012 என்ற நாள் நமக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம். இந்த உலகம் தோன்றிய நாள் முதல் பல நாகரிக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அதில் ஒரு நாகரிகம் தான் "Mayans" என்று சொல்லப்படும் அதி புத்திசாலி நாகரிக மக்கள். கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த இந்த நாகரிக மக்கள் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளனர். குறிப்பாக Astronomy என்று சொல்லப்படும் வானசாஸ்திரத்தில் அவர்களை மிஞ்ச ஆள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர். அவர்களுடைய நாள்காட்டி முடியும் நாள் தான் டிசம்பர் 21, 2012. அவர்களுடைய நாள்காட்டி பற்றி சொல்ல ஒரு தனி வலை பதிப்பே தேவை. அதை வேறொரு பதிப்பில் சொல்கிறேன். மேலும் தகவல்கள் பெற இந்த இணைய இணைப்பை பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/Maya_civilization http://en.wikipedia.org/wiki/Maya_calendar
சரி நாம் விஷயத்துக்கு வருவோம், நம்முடைய சூரியனால் நமக்கு என்ன பெரிய பாதிப்பு வந்துவிட போகிறது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முதலில் இந்த வீடியோவைப் பாருங்கள்.
இப்படி ஒரு உஷ்ண அளவு கொண்ட சூரிய கதிர் வீச்சு நம்மை தாக்கும் போது, அது நம்முடய செயற்கைக்கோள்களை மட்டும் இன்றி, Power grid என்று சொல்லப்படும் மின்கம்பங்களையும் பாதிக்கும், இதனால் நாம் பல நாட்களுக்கு (ஏன் சில மாதங்கள் வரை) தகவல் தொடர்பு இன்றி, மின்சாரம் இன்றி வாழ வேண்டிய நிலை வரும். அவ்வளவு ஏன் தானே புயலால் மின்சாரம் இன்றி தவித்த கடலூர் மக்களையும், புதுச்சேரி மக்களையும் கேளுங்கள். சாதாரண புயலுக்கே அந்த நிலை என்றால், சூரிய கதிர் வீச்சின் நிலை இதை விட பல நூறு மடங்கு இருக்கும். இந்த நிலையில் மக்கள் உண்ண உணவின்றி, குடிக்க நீர் இன்றி இறக்க நேரிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள்.
இதை நம்ப உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், நான் இனி சொல்லப் போகும் விஷயங்களை படியுங்கள். உங்களுக்கு நம்பிக்கை வரும்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்த சூரிய கதிர் வீச்சை முழுவதுமாக நம்பி, BUNKERS என்று சொல்லப்படும் பதுங்கு குழிகளை அமைத்துள்ளார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அதை அந்தந்த நாட்டு மக்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கி கொண்டு இருக்கிறார்கள், நம்மை போல் சாமன்ய மக்களால் எண்ணிக் கூடப் பார்க்க முடியாத விலையில் அதை விற்றுக் கொண்டும் இருக்கிறார்கள். நேரம் கிடைக்கும் பொது " SURVIVAL CONDO " என்று தேடி பாருங்கள், பல விஷயம் உங்களுக்கு புரியும்.
மேலே கொடுக்கப்பட்ட இந்த படம் அப்படி ஒரு பதுங்கு குழியில் அமைக்கப் பட்ட ஒரு கட்டிடம் தான். இதில் 70 முதல் 100 பேர் வரை பல நாள் எந்த ஒரு சிரமமும் இன்றி தங்கலாம். அனைத்து வித வசதிகளும் நீச்சல் குளம் வரை அனைத்தும் இதில் அடங்கும்.
அது சரி, இது சில தனியார் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்துக்காக மக்களை பயமுறுத்தி இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்காமல் இல்லை, அதற்கும் என்னிடம் பதில் உள்ளது. SURVIVAL CONDO என்று சொல்லப்படும் இந்த பதுங்கு குழிகளை தனியார் நிறுவனம் மட்டும் செய்ய வில்லை. இந்த உலகின் பெரிய பதுங்கு குழியை அமெரிக்க அரசாங்கமே கட்டி வைத்திருக்கின்றது என்றால் நம்புவீர்களா...?..
அது தான் சதி கோட்பாடுகளின் சாராம்சமாக விளங்கும் "டென்வர் விமான நிலையம் (DENVER INTERNATIONAL AIRPORT )".
நன்றாக இயங்கி கொண்டு இருந்த டென்வெர் விமான நிலையத்தை மூடி, ஒரு புதிய டென்வெர் விமான நிலையம் உருவாக்கப்பட்டது, ஆனால் அந்த விமான நிலையத்தின் கீழ் ஒரு பிரம்மாண்ட பதுங்கு குழியை அமெரிக்க அரசாங்கம் அமைத்திருக்கும் விஷயம் கசிய தொடங்கிஉள்ளது. (டென்வர் விமான நிலையத்தின் கீழ் ஏன் என்ற உங்கள் கேள்வியும் நியாயமானதே, அதற்கு கூறப்படும் காரணம் அந்த இடம் அமெரிக்காவின் நடுவில் இருப்பதாலும், இயற்கை பேரிடர் தொல்லை குறைவு என்பதாலும்). மேலும் " FREE MASON / SECRET SOCIETY " என்று சொல்லபடும் இவ்வுலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் சில பேராசை கொண்ட சதிகாரர்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒவியங்களும் அந்த விமான நிலையத்தில் இருக்கின்றன. "FREE MASON" பற்றி வேறு ஒரு வலை பதிப்பில் விரிவாக சொல்கிறேன். இப்போது டென்வர் விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் சில ஒவியங்களை பாருங்கள்.
இது விமான நிலையத்தின் அடிக்கல், இதில் உள்ள சின்னம், FREE MASON களின் சின்னம். நம்பிக்கை வரவில்லை என்றால்
இங்கே போய் பாருங்கள்.
இவர்கள் தான், உலக மக்கள் அனைவரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும்
பணக்கார சதிகாரர்கள், இவர்களின் கோட்பாடே, உலக மக்கள் தொகையை 50 கோடியாக செய்தால்
மட்டுமே ஓர் குடை ஆட்சி செய்ய முடியும் என்றும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி
முக்கியமான சிலரை மட்டுமே காப்பாற்ற வேண்டி இந்த அழிவின் செய்திகளை மறைப்பதாக ஒரு
கருத்து உள்ளது.
இது தான் GEORGIA
STONEHENGE, FREE MASON’களால் நிறுவப்பட்ட இந்த
கல்லின் முதல் வாக்கியம் என்ன என்று தெரியுமா,? கீழே உள்ள படத்தைப் பாருங்கள்,
விமான நிலையத்தில் உள்ள இந்த படத்தைப் பாருங்கள்.
அமைதியின் சின்னமான புறாவைக் கொன்று ஓரு ராட்சசன் நிற்கிறான், அவன் பின்னே
பலர் இறந்து கிடக்கிறார்கள்.
இதை போல் பல வித்தியாசமான காட்சிகள், அதுவும் அழிவை காட்டும் படங்கள் இங்கு
ஏராளம்.
மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோ பதிப்பை பாருங்கள்,
எது எப்படியோ, இந்த உலகம் இந்த மாதம் அழியுமா என்று தெரிய ஒரு சில வாரங்கள்
காத்திருந்தால் போதும்.. ஆனால் FREE MASON களின் திட்டம் நிறைவேறுமா என்று தான் தெரயவில்லை.




Nice article Shafath.. Waiting for your blog updates for Mayan Calender and Freemasons. Keep writing more....
ReplyDeleteP.S: Also add titles for your blogs, so it will be easier to follow :)