Tuesday, December 11, 2012

HAARP



என்ன வேண்டும் உங்களுக்கு?  இடியா? புயலா?  மழையா? அல்லது பூகம்பமா?

நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து,  மனிதன் தன் இனத்தை அழித்துக் கொண்டு தான் இருக்கிறான். அப்போது போர் புரிய வில், வாள் போன்றவற்றை உபயோகித்தான். பின் தன் அறிவின் ஆற்றலைப் பயன்படுத்தி துப்பாக்கி,  பீரங்கி , ஏவுகணை என்று போர் ஆயுதங்களைப் பயன்படுத்தினான்,  அதன் உச்சம் தான் அணு குண்டு என்னும் கொடிய ஆயுதம்.

ன் அறிவின் ஆற்றலை சிறிது சிறிதாக அழிவின் பக்கம் திருப்பிய மனிதன் "BIO WEAPON" என்று சொல்லும் கிருமிகளை ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தான். அதன் விளைவாக உருவானது தான் SARS, ANTHRAX, H1N1, AIDS போன்ற கொடிய கிருமிகளும் அதனால் உருவான வியாதிகளும்.

மேலே சொன்ன அனைத்து விதமான ஆயுதங்களிலும் ஒரு ஒற்றுமை உண்டு,  அது எதிரிகள் மீது இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டது என்று தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இது அனைத்தையும் காட்டிலும்  புதிய பயங்கர ஆயுதம் ஒன்று உருவாகி இருக்கிறது அது தான் HAARP ( HIGH FREQUENCY ACTIVE AURORAL RESEARCH PROGRAM).

Bernard eastund என்ற ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு தான் இந்த HAARP, வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த Bernard, சில இடங்களில் மழை அதிகம் பெய்வதும் சில இடங்களில் வறட்சி நிலவுவதும் கண்டு வருந்தி,  ஏன் மழை மேகங்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்ப முடியாது என்று ஒரு வினா எழுப்பி, அதை ஆராய்ந்து எதிர்காலத்தில் ஒரு அதிபயங்கர ஆயுதமாக மாறும் என்று உணராமல் கண்டுபிடித்ததுதான் இந்த HAARP.

சரி இதை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்,  HAARP  என்றால் என்ன அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்து கொள்வோம், அதற்கு நீங்கள் உங்கள் பள்ளி நாட்களில் படித்த சிலவற்றை ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும். நம்முடைய வளி மண்டலம் பல அடுக்குகளைக் கொண்டது. அது TROPOSPHERE, STRATOSHPHERE, OZONESPHERE, IONOSPHERE மற்றும் EXOSHPHERE.. இதை  இப்போது அதிகம் ஆராயத் தேவை இல்லை, இதில் உள்ள ஒவ்வொரு அடுக்குகளுக்கும் ஒரு சிறப்பு உண்டு, ஒரு காரண காரியம் உண்டு. அதில் முக்கியமான ஒன்று IONOSPHERE  என்னும் அயனி மண்டலம். நம்முடைய தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துக்கும், மழை மேகங்களைக் காப்பதற்கும் இந்த IONOSPHERE   என்னும் அயனி மண்டலம் தான் பயன்படுகிறது.

இந்த மண்டலத்தில் மாறுதல்களை ஏற்படுத்தினால் இது மழை மேகங்களை ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு அனுப்பவோ அல்லது புது மேகங்களை உருவாக்கவோ முடியும் என்று Bernard eastund  கண்டுபிடித்தார்.


சரி இது நம் சதி கோட்பாட்டுக்குள் எப்படி வந்தது என்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை,  அதன் பதில் இதோ. இந்த HAARP என்னும் கண்டுபிடிப்பின் சக்தியை வெகு சீக்கிரமே புரிந்து கொண்ட அமெரிக்க அரசு,  இதன் முழுக் கட்டுப்பாட்டையும் அதன் ராணுவத்தின் கட்டுக்குள் கொண்டு வந்தது. இங்கே தான் ஆரம்பிக்கிறது முதல் சதி வேலை, நியாயமாக பார்த்தால் இந்த கண்டுபிடிப்பு வானிலை ஆராய்ச்சி மையத்தின் கீழ் அல்லவா சென்று இருக்க வேண்டும்.? ஆனால் அமெரிக்க ராணுவம் குறிப்பாக அமெரிக்காவின் வான்படையும் கடற்படையும் தான் மொத்த ப்ராஜெக்ட்டுக்கும் ஆன செலவை செய்கிறது. அப்போது தான் சில சமூக ஆர்வலர்கள் இதை ஆராய அரம்பித்தனர். அவர்கள் சொல்லும் விஷயங்கள் நம்மை அதிர வைக்கின்றன. ஒரு அருமையான மனித நேய கண்டுபிடிப்பு ஒரு அதி பயங்கர ஆயுதமாக மாறியிருக்கும் உண்மை வெளியில் வர ஆரம்பித்தது.

கீழே உள்ள படம் தான் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள HAARP. ஆராய்ச்சி மையத்தின் படம். இதில் 180 ஆண்டெனாக்கள் உண்டு,  இது ELF  என்று சொல்லப்படும் Extremely low frequency, அதாவது மிக குறைந்த அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியது, இதன் சக்தியை சொல்ல வேண்டும் என்றால் உலகிலேயே பெரிய வானொலி நிலையம் 50 கிலோ வாட் சக்தியை பயன்படுத்தி அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது,  ஆனால் HAARP 3.6 மில்லியன் வாட் சக்தியை பயன்படுத்தி குறைந்த அதிர்வலைகளை அயனி மண்டலம் நோக்கி அனுப்புகிறது. அதவது 7500 மடங்கு அதிகம்.
 



இதன் சக்தியை ஒருமுகப் படுத்தி, எந்த ஒரு தாக்குதலையும் ஏற்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.  யோசித்து பாருங்கள். வானில் பறக்கும் விமானமோ,  இல்லை தாக்க வரும் ஏவுகணையோ, இல்லை நம் உலகை சுற்றும் செயற்கைக் கோள்களோ இந்த HAARP இன் சக்தி கொண்டு எளிதாக அழிக்கப் பட  முடியும், அதுவும் தாங்கள் தாக்கப் பட்டார்கள் என்ற செய்தி தெரியாமலே.. இது அனைத்தும் ஒரு வல்லரசு நாடு தன்னை காத்து கொள்ள எடுக்கும் ஒரு நடவடிக்கை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அங்கு தான் அமெரிக்க அரசாங்கத்தின் சதி வேலைகள் வெளிச்சத்திற்கு வருகிறது.

இந்தியாவில் அதுவும் நம் சென்னையில் விடாமல் 15 நாட்கள் மழை பெய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். நீங்கல் வருண பகவானை திட்டுவீர்களா?  தமிழக அரசாங்கத்தைத் திட்டுவீர்களா? இல்லை HAARP  தான் இதை செய்தது என்று உணர்வீர்களா?  இது தான் HAARP இன் பலம். உங்கள் மேல் போர் தொடுக்கப்பட்டது என்று நீங்கள் உணரும் முன்னே உங்களை அறியாமலே இந்தப் போர் நடக்கிறது. இதை  நீங்கள் நம்ப மறுக்கலாம். ஜப்பானில் ஏற்பட்ட சுனாமிக்கும்,  இந்தோனேஷியாவில்   ஏற்பட்ட சுனாமிக்கும் இந்த HAARP தான் காரணம் என்று அறிவியல் ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப்பட்டது, என்ன அதை அமெரிக்க அரசாங்கம் தான் ஏற்க தயாராக இல்லை. ஜப்பான் ஒரு வல்லரசு நாடு, அதை அழிக்க அமெரிக்க நினைத்திருத்தால், இயற்கை அழிவைத் தூண்டுவதைத் தவிர வேறு வழியே அமெரிக்காவுக்கு இல்லை...

சரி இவை அனைத்தும் ஒரு மிகப் பெரிய வல்லரசு நாடு தன்னை காத்து கொள்ள ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவதில் ஒரு தவறும் இல்லை என்று இன்னும் நீங்கள் நினைக்கலாம்,  ஆனால் இங்கு தான் ஒரு மிக பெரிய சதி திட்டமே ஒளிந்து கொண்டு இருக்கிறது., அது தான் இந்த HAARP  கொண்டு " MIND CONTROL " என்று சொல்லப்படும் மனோவசியம் செய்யும் ஒரு திட்டம். நம்முடைய மூளை சமிக்கைகள் HAAAP கருவி அனுப்பும் அதே குறைந்த அதிர்வெண் அலைகளைக் கொண்டே சமிக்கை செய்கிறது. இவ்வாறு  அனுப்பப் படும் குறைந்த அதிர்வெண் அலைகள் மூலம் நம்முடைய மூளைக்கு வெளியில் இருந்து சமிக்கை செய்ய முடியும். உதாரணமாக நீங்கள் ஒருவரைத் தாக்க வேண்டும் என்று இந்த கருவி மூலம் உங்கள் மூளைக்கு சமிக்கை செய்யலாம் அதுவும் நீங்கள் உணராமலே. இந்த கொடிய பரீட்சையை தற்போது சில மனிதர்களிடம் பரீட்சை செய்து பார்ப்பதாக வலை தளங்கலில் செய்திகள்  வருகின்றன...

ஹ்ம்ம்ம் இன்னும் என்ன என்ன பயங்கர ஆயுதங்களை மனிதன் கண்டு பிடிப்பானோ தெரியவில்லை. நம்முடைய அழிவு நம்முடைய கன்டுபிடிப்புகளால் தான் என்பது மட்டும் நிச்சயம்.
நான் சொன்ன விஷயங்களை நம்ப மறுக்கும் அனைவரும்,

கீழே கொடுத்திருக்கும் வீடியோ பதிப்பைப்  பாருங்கள்  மேலும் பல விஷயங்கள் புரியும்.மீண்டும் சந்திப்போம்.




 

Thursday, December 6, 2012

December 2012




இந்த மாதம் அழிய போகிறதா இந்த உலகம் ?

இந்த உலகம் தோன்றிய நாள் முதல் ஒரு சில பிரிவு மக்கள் " இந்த வருடம் அழிய போகிது, அடுத்த வருடம் அழிய போகிது" என்று கூக்குரல் இட்டு கொண்டு தான் இருக்கின்னர். ஆனால் அப்போது சொன்னவர்களுக்கும் இப்போது சொல்பவர்களுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அது என்னவென்றால் இப்போது சொல்லும் பலரில் சிலர் றிவியல் ஆதாத்தை முன்னிறுத்தி இந்த உலகின் ழிவை அறிவிக்கிறார்கள்.

நான் ஒன்றை தெளிவுப்டுத்த விரும்புகிறேன்.  லக அழிவு என்பது இந்த உலகில் வாழும் ஜீராசிகளின் அழிவு மட்டுமே.

லக அழிவுக்கு பல காணங்கள் சொல்லப்படுகின். அது இயற்கை பேரிடர்கள் (நிடுக்கம், சுனாமி, எரிமலை, புயல் போன்வை).  நிபிரு-Planet X என்னும் சொல்லப்படும் த்தாவது ஒரு கிரகம் நம்மை தாக்கும் என்றும், Polar shift என்று சொல்லப்படும்  துருவ மாற்றம் நிகழும் என்றும்,  Black hole  என்று சொல்லப்படும் ருங்குழியின் ர்ப்பு விசையால் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீராசிகளும் அழியும் என்றும் சொல்லப்படுகிது. ஆனால் இதில் சொன்ன பல விஷயங்கள்றிவியல் ஆதாரம் இல்லாகாணத்தினால் ஏற்கபடவில்லை.

ஆனால் அறிவியல் மறுக்காத ஒன்று உள்ளது. அது தான் Coronory Mass Ejectionன்று சொல்லப்படும் சூரிய வெப்பக்கதிர்வீச்சு. இந்த ஒரு விஷயத்தை அறிவியல் மறுப்பதில்லை.

இந்த சூரிய வெப்பக்கதிர்வீச்சு என்ன என்பதை பார்ப்பதற்கு முன், இந்த டிசம்பர் 21, 2012 என் நாள் நமக்கு எப்படி கிடைத்தது என்று பார்ப்போம். இந்த உலகம் தோன்றிய நாள் முதல் பல நாகரிக மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். தில் ஒரு நாகரிகம் தான் "Mayans" என்று சொல்லப்படும் அதி புத்திசாலி நாகரிக மக்கள். கிட்டத்தட்ட 4000 வருடங்களுக்கு முன் வாழ்ந் இந்த நாகரிக மக்கள் பல துறைளில் சிறந்து விளங்கியுள்ளனர்.  குறிப்பாAstronomy ன்று சொல்லப்படும் வானசாஸ்திரத்தில் அவர்ளை மிஞ்சள் இல்லை என்று சொல்லும் அவுக்கு பல கண்டுபிடிப்புகளை செய்துள்ளனர். அவர்களுடைய நாள்காட்டி முடியும் நாள் தான் டிசம்பர் 21, 2012. அவர்களுடைய நாள்காட்டி பற்றி சொல்ல ஒரு தனி வலை பதிப்பே தேவை.  அதை வேறொரு பதிப்பில் சொல்கிறேன். மேலும் தகவல்கள் பெ இந்த இணைய இணைப்பை பாருங்கள்.


http://en.wikipedia.org/wiki/Maya_civilization
http://en.wikipedia.org/wiki/Maya_calendar



சரி நாம் விஷயத்துக்கு வருவோம், நம்முடைய சூரியனால் நமக்கு என்ன பெரிய பாதிப்பு ந்துவிட போகிது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு முலில் இந்வீடியோவைப்  பாருங்கள்.





இப்படி ஒரு உஷ்ணவு கொண்சூரிய கதிர் வீச்சு நம்மை தாக்கும் போது, அது நம்முடய செயற்கைக்கோள்ளை மட்டும் இன்றி,  Power grid என்று சொல்லப்படும்  மின்கம்பங்களையும் பாதிக்கும், னால் நாம் பல நாட்களுக்கு (ன் சில மாங்கள்  வரை) தகவல் தொடர்பு இன்றி,  மின்சாரம் இன்றி வாவேண்டிய நிலை வரும். வ்வவு ன் தானே புயலால் மின்சாரம் இன்றி தவித்த கடலூர் மக்களையும், புதுச்சேரி மக்களையும் கேளுங்கள். சாதாரண புயலுக்கேந்த நிலை என்றால்,  சூரிய கதிர் வீச்சின் நிலை இதை விட பல நூறு மடங்கு இருக்கும். இந்த நிலையில் மக்கள்ண்ணவின்றி,  குடிக்க நீர் இன்றிக்க நேரிடும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள்.

தை நம்ப உங்களுக்கு கஷ்டமாக இருந்தால்,  நான்னி சொல்லப் போகும் விஷயங்களை படியுங்கள். உங்களுக்கு நம்பிக்கை வரும்.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா,  ஜப்பான்,  சீனா,  ஜெர்மனி போன் நாடுகள் இந்த சூரிய கதிர் வீச்சை முழுவதுமாக நம்பி, BUNKERS என்று சொல்லப்படும் பதுங்கு  குழிகளை அமைத்துள்ளார்கள் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?  அதை அந்தந்த நாட்டு மக்கள் போட்டி போட்டுகொண்டு வாங்கி கொண்டு இருக்கிறார்கள்,  நம்மை போல் சாமன்ய மக்களால்ண்ணிக் கூப் பார்க்க முடியாத விலையில் அதை விற்றுக் கொண்டும் இருக்கிறார்ள். நேரம் கிடைக்கும் பொது " SURVIVAL CONDO " என்று தேடி பாருங்கள்,  பல விஷயம் உங்களுக்கு புரியும்.

                                                           

மேலே கொடுக்கப்பட்ட இந்த படம் அப்படி ஒரு பதுங்கு குழியில் அமைக்கப் பட்ட ஒரு கட்டிடம் தான். இதில் 70 முதல் 100 பேர் வரை பல நாள் எந்த ஒரு சிரமமும் இன்றிங்கலாம். அனைத்து வித வசதிகளும் நீச்சல் கும் வரை அனைத்தும் இதில் அடங்கும்.

அது சரி, இது சினியார் நிறுனங்கள்ங்கள் வியாபாரத்துக்காக மக்களை பயமுறுத்தி இருக்கலாம் என்று நீங்கள் சொல்வது என் காதுக்கு கேட்காமல் இல்லை,  தற்கும் என்னிடம் பதில் உள்ளது. SURVIVAL CONDO என்று சொல்லப்படும் இந்த பதுங்கு குழிகளை தனியார் நிறும் மட்டும் செய்ய வில்லை. இந்த உலகின் பெரிய பதுங்கு குழியை மெரிக்க அரசாங்கமே கட்டி வைத்திருக்கின்து என்றால் நம்புவீர்களா...?..

து தான் சதி கோட்பாடுகளின் சாராம்சமாக விளங்கும் "டென்ர் விமான நிலையம் (DENVER INTERNATIONAL AIRPORT )".

நன்றாக  இயங்கி கொண்டு இருந்த டென்வெர் விமான நிலைத்தை மூடி, ஒரு புதிய டென்வெர் விமான நிலையம் உருவாக்கப்பட்டது, னால் அந்த விமான நிலைத்தின் கீழ் ஒரு பிரம்மாண்ட பதுங்கு குழியை அமெரிக்க அரசாங்கம் அமைத்திருக்கும் விஷயம் கசிய தொடங்கிள்ளது. (டென்வர் விமான நிலையத்தின் கீழ் ஏன்  என்ற உங்கள் கேள்வியும் நியாயமானதே, அதற்கு கூறப்படும் காரணம் அந்த இடம் அமெரிக்காவின் நடுவில் இருப்பதாலும், இயற்கை பேரிடர் தொல்லை குறைவு என்பதாலும்).  மேலும் " FREE MASON / SECRET SOCIETY " என்று சொல்லபடும் இவ்வுலகை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் சில பேராசை கொண்ட சதிகாரர்களின் விருப்பங்களை வெளிப்படுத்தும் ஒவியங்களும் அந்த விமான நிலைத்தில் இருக்கின்ன. "FREE MASON"  ற்றி வேறு ஒரு வலை பதிப்பில் விரிவாக சொல்கிறேன். இப்போது டென்ர் விமான  நிலைத்தின் உள்ளே இருக்கும் சில ஒவியங்களை பாருங்கள்.





இது விமான நிலையத்தின் அடிக்கல், இதில் உள்ள சின்னம், FREE MASON  களின் சின்னம். நம்பிக்கை வரவில்லை என்றால் இங்கே போய் பாருங்கள்.




இவர்கள் தான், உலக மக்கள் அனைவரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் பணக்கார சதிகாரர்கள், இவர்களின் கோட்பாடே, உலக மக்கள் தொகையை 50 கோடியாக செய்தால் மட்டுமே ஓர் குடை ஆட்சி செய்ய முடியும் என்றும் இப்படி ஒரு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முக்கியமான சிலரை மட்டுமே காப்பாற்ற வேண்டி இந்த அழிவின் செய்திகளை மறைப்பதாக ஒரு கருத்து உள்ளது.





இது தான் GEORGIA STONEHENGE, FREE MASON’களால் நிறுவப்பட்ட இந்த கல்லின் முதல் வாக்கியம் என்ன என்று தெரியுமா,? கீழே உள்ள படத்தைப் பாருங்கள்,






விமான நிலையத்தில் உள்ள இந்த படத்தைப் பாருங்கள்.




அமைதியின் சின்னமான புறாவைக் கொன்று ஓரு ராட்சசன் நிற்கிறான், அவன் பின்னே பலர் இறந்து கிடக்கிறார்கள்.

இதை போல் பல வித்தியாசமான காட்சிகள், அதுவும் அழிவை காட்டும் படங்கள் இங்கு ஏராளம்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோ பதிப்பை பாருங்கள்,








எது எப்படியோ, இந்த உலகம் இந்த மாதம் அழியுமா என்று தெரிய ஒரு சில வாரங்கள் காத்திருந்தால் போதும்.. ஆனால் FREE MASON களின் திட்டம் நிறைவேறுமா என்று தான் தெரயவில்லை.